பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு..

பங்குனி உத்திர தீர்த்தவாரி. பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி. 100-க்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பல்லக்கு ஏழூர் புறப்பாடு வருகின்ற மார்ச் 27-மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி, 10-ஆம் நாளான இன்று குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பங்குனி உத்திர தீர்த்தவாரி பஞ்ச மூர்த்தி வீதியுலா நிகழ்ச்சியானது திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க, சிவன் பார்வதி வேடமிட்டு நடனமாடியவாறும், காளி ஆட்டம், புலியாட்டம் மயிலாட்டம், ஒயிலாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை, சிவத்திரு கைலாய சிவபூத கண திருக்கூட்டம் சிவனடியார்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *