வில்லியனூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நேற்று திருக்கல்யாண விழா நடந்தது சுவாமி மற்றும் தாயார் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

அதனைத் தொடர்ந்து பெண்கள் சீர்வரிசைகளை கையில் ஏந்தி வர மேளதாளத்துடன் சுவாமி, தாயார் உட்பிரகார உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க அக்னி மூட்டி, காப்புக் கட்டி, திருக்கல்யாணம் நடந்தது.

பின்னர் மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனைத் திரளாக ஆண்கள் பெண்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *