திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் சாத்தனூர் கிராமத்தில் அமர்ந்து அருள்தரும் ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகை சமேத ஶ்ரீ சிவலோகநாதர் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்ற பங்குனி மாதம் 9ந்தேதி கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜைகளுடன் துவங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாக பூஜையின் நிறைவு மஹாபூர்ணாஹுதி நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மேல் தாளங்கள் முழங்க சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து சரியாக 11மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று
பின்னர் தீபாராதனை காண்பிக்க பட்டு மூலவர் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதான பிரச்சினைகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *