சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை “ஸ்ட்ரோக் பிசியோதெரபி வழங்கல்
சிதம்பரம்
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை “ஸ்ட்ரோக் பிசியோதெரபி”
புற நோயாளிகளுக்கான பகுதிக்கு குளிர் சாதன வசதி மற்றும் தளவாடப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த குளிர் சாதன வசதிகளையும் நோயாளிகள் வசதிக்காக நாற்காலிகள், மேசை போன்ற தளவாடப் பொருட்களையும்சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளர் முனைவர். சின்னையன் மற்றும் முனைவர்.பிரகதீஸ்வரன் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கினர.
இந்த தளவாடப் பொருட்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நமது சங்கத்தின் தலைவர் திருமதி. கோ.நிர்மலா தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.திருப்பதி, மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஜூனியர் சுந்தரேஷ் , துறைத் தலைவர் டாக்டர். சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாககலந்து கொண்டனர்,
சங்கத்தின் மூத்த தலைவர் முனைவர் பிரகதீஸ்வரன், உறுப்பினர் முனைவர் ஜானகி ராமன், சுரேந்திரன், பிசியோதெரபி துறையைச் சேர்ந்த டாக்டர் அனிதா, டாக்டர் சுரேஷ், மற்றும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ மனையில் பயன்பெற்ற பயனாளிகள் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோரின் அன்பான அக்கறையான மருத்துவ சேவைகளை பாராட்டி பேசினர். சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் எல்.சி.ஆர். கே.நடராஜன் நன்றி கூறினார்.