வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், வருடம் தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பங்குனிபெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ அம்பாள் பூச்சொரிதல் விழாவும், மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு முதல் காப்பு கட்டுதலும், பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுகளும், அன்று முதல் தினசரி ஸ்ரீ அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெருந்திருவிழாவும், கடந்த 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகஆராதனையும், மாலை பிரபல நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆண்டாங் கோவில் ஏ.வி.எஸ். குருமூர்த்தி குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரவு பத்து மணி அளவில் ஸ்ரீ அம்பாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது. அது சமயமும் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது, புஷ்பப் பல்லக்கு 25 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை ஆலயத்தை வந்தடைந்தது, அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தற்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி, செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டி த் தெருவாசிகள், ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகபடிதாரர்கள் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *