தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
காமராசர் சிலை அருகே திறந்த வெளி வாகனத்தில் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாவுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்
முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரை மேற்கொண்டார்
அவர் பேசும் போது ;-
பேரிடர் காலங்களில் ஆடு, மற்று மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில்
நம்முடைய வாழ்க்கையை பற்றி பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக் கூடாது.
இது மற்றவர்களுக்கு தேர்தல்களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன். தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள்தான் காமராஜர்,முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தமிழக தூய அரசியலை உருவாக்க தேர்தலில்
நாம் தமிழர் கட்சி வேட்பாளாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் பேசினார்.