புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் திமுக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் மக்கள் விரும்பி என்றைக்கும் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது கிடையாது என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் பேச்சு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கழக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் சிவநேசன் தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு களம் இறங்கியிருக்கிறார் தேர்தல் பணிகளை செய்வதற்காக தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் முன்னாள் அமைச்சர் இரா .காமராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது

அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் கூறியதாவது இன்றைக்கு நாம் வைத்திருக்கின்ற அடித்தளம் வர இருக்கின்ற 2026 தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியாரை எந்த ஒரு சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது புரட்சித்தமிழர் எடப்பாடி யார் 2026 இல் தமிழக முதலமைச்சர் என்பதை இன்று அனைத்து மக்களும் உறுதி செய்து விட்டனர் இதுவரை சுதந்திர இந்தியாவில் எத்தனையோ ஆட்சிகள் எத்தனையோ முதலமைச்சர்கள் வந்திருக்கிறார்கள் எல்லா காலங்களையும் விட இந்த திமுக ஆட்சி தான் ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிலேயே மிகப்பெரிய கெட்ட பெயரை சம்பாதித்த ஆட்சி இந்த திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை

மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் எல்லா தரப்பினரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலம் தவிர்த்து மற்ற எல்லா காலங்களிலும் திமுக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் மக்கள் விரும்பி என்றைக்கும் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது கிடையாது . திமுகவுக்கு எதிர்ப்பு வாக்கு என்பது அப்படியே நிலைத்து போய் இருக்கிறது

அதை நாம் இந்த. தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் . ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் டீ மனோகரன் கூட்டணி மன்னார்குடி ஒன்றிய கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் மன்னார்குடி நகரக் கழக செயலாளர் ஆர் .ஜி. குமார்அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கழக பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி பொறுப்பாளர்கள் கழக கூட்டணிக் கட்சிகளான தேமுதிக திருவாரூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பழனிவேல் திருவாரூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி .பாலசுப்பிரமணியன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் முருகானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபால் மன்னார்குடி நகரக் கழக செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் எஸ் டி பி ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *