மதுரை,

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரடி ஒப்புதலோடு, நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், ஆந்திரா மாநில பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *