சிவசேனா UBT கட்சி சார்பில் ஆதரவு அளித்து மாவட்ட தலைவர் கே ,ஜி, சத்தி வேலன் தலைமையில் 300 மேற்பட்டோர் கலந்துகொண்டு நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா UBT அணியினர் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அதன்
மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆணைக்கிணங்கஇந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயன் அவர்களை சந்தித்து திருப்பூர் மாவட்ட தலைவர் கே ஜி சக்திவேலன் தலைமையில் சிவசேனா UBT கட்சி சார்பில் 300க்கு மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருப்பூர் மாவட்ட தலைவர் கே.ஜி.சக்திவேலன் தலைமையில் மாநில மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் குமார் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம் தெற்கு மாநகரச் செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் முழு ஆதரவையும் அளிப்பதாகவும் மேலும் திருப்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தோழர் சுப்புராயன் அவர்களை வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என தெரிவித்தனர் .
திருப்பூர் 35 வது வார்டு கே பி என் காலனி பகுதியில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கும் போது சிவசேனா UBT கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கே ,ஜி, சக்திவேலன் உடன் இருந்து பொதுமக்களிடம் கதிர் அருவாள் சின்னத்திற்கு பெரும் வரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம் என்று கூறினார்