தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா வடையுடன் பிரச்சாரம் தேனி பாராளுமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் வி. டி. நாராயண சாமியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு அண்ணா திமுகவின் செய்தி தொடர்பாளர் சசிரேகா ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் பேசிய போது இரண்டு வடைகளை கையில் வைத்துக் கொண்டு இதில் ஒன்று பிரதமர் மோடி சுட்ட வடை இன்னொன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சுட்ட வடை என்றும் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி பேரூர் அண்ணா திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்