மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவுக்காக மதுரை தல்லாகுளம் கோவிலில் முகூர்த்தக் கால் நடப்பட்டது.

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிர சித்தி பெற்றதாகும்.

இதற்கான முன்னோட்ட நிகழ்வாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு மேளதாளம் முழங்க நடைபெற்றது.

இதில்வர்ணம் பூசப்பட்டு, மாவிலை, பூ மாலைகள் இணைக்கப்பட்டமுகூர்த்தக் கால் நடப்பட் டது. தொடர்ந்து ராஜகோபுரம் முன்பாகவும் முகூர்த்தக் கால் நடப்பட்டது.

பின்னர் மூலவர் சன்னதி முன்பாக ஆயிரம் பொன் சப்பரம், யாளி திருமுகத்திற்கு நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிரசு அலங்காரம் செய்யும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

அதனைத் தொடர்ந்து மதுரை வண்டியூர் வைகை யாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா மாலை 3 மணிக்கு நடை பெற்றது. முன்னதாக இந்நிகழ்ச்சியின் போது கள்ளழகர் கோவில் அறங்காவலர் குழு
தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்கு மார், ரவிக்குமார், மீனாட்சி பிரியாந்த், கண்காணிப்பாளர் கள் பாலமுருகன், பிர திபா, அருள் செல்வன், மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சித்திரை திருவிழா நிகழ்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி சப்பர முகூர்த்த விழா இதே தல்லாகுளம் கோவிலில் நடந்தது. அதன் பிறகு நேற்று கொட்டகை முகூர்த்த விழா நடந்தது.

இதை தொடர்ந்து அழகர்கோவிலில் இருந்து வண்டியூர் முடிய அழகர் எழுந்தருளும் மண்டபங்கள் அனைத்திலும், பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *