தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து சோழவந்தான் பகுதியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்பி உதயகுமார் நடைபயண பிரச்சாரம் செய்தார்

இந்த பிரச்சாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் ,பேரூர் கழகச் செயலாளர் முருகேசன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்

அப்போது செய்தியாளர்களிடம் ஆர் பி உதயகுமார் பேசியதாவதுஅண்ணாமலை வாய்க்கொழுப்பு எடுத்து பைத்தியம் போல் பேசி வருகிறார், அதிமுகவில் யார் தலைவர் என்று ஜாதகம் கணிப்பது போல் கூறி வரும் அண்ணாமலை சாதாரண கவுன்சிலர் தேர்தலில் கூட நின்று வெற்றி பெற முடியாத அண்ணாமலை அதிமுகவின் ஜாதகத்தை கணிக்க 2 கோடி தொண்டர்களும் ,8கோடி மக்களும் உள்ளார்கள்.
டாக்டர் ,இன்ஜினியர், வக்கீல் போன்ற படிப்புகளில் தோல்வி அடைந்து மன அழுத்தம் ஏற்பட்டு பைத்தியம் பிடிப்பது போல இன்றைக்கு நான் வெற்றி பெற்று விடுவேன் என்று டெல்லியில் கொடுத்த உத்தரவாதம் இன்றைக்கு பொய்யாய் போனதால் பைத்தியம் பிடித்து போய் போன்று பேசி வருகிறார்.

கோவிலில் யாசகம் கேட்கும் ஒருவர்  கோபுரத்தை பார்த்து மக்கள் கும்புடுவதை பார்த்து தன்னைத்தான் கும்பிடுகிறார்கள் என்று உளறி வருகிறான் மக்கள் அங்குள்ள அதிகாரியிடம் போய் முறையிட்டயுடன் அந்த நபரை அங்கிருந்து எதிர்திசைக்கு அப்புறப்படுத்துகிறார்கள். அப்பொழுது மக்கள் கும்பிடும் போது தன்னை கும்பிடவில்லை இறைவனை கும்பிடுகிறார்கள்.

என்று தெரிய வருகிறது அதே போல தான் அண்ணாமலை நிலைமை உள்ளது.
பிஜேபி ,காங்கிரஸ் ,திமுக போன்ற கட்சிகளில்சென்று இணையும் பொழுது அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கிறார்கள். இரவல் வாங்கித் தான் தங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் அதிமுகவில் அப்படியல்ல .

இங்கு ஒருவர் வெளியேறினால் 1000 தொண்டர்கள் வெகுண்டு எழுவார்கள் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.
2011 அதிமுக இருக்காது என்று அப்போது அழகிரி சொன்னார் ஆனால் அம்மா முதலமைச்சராக வந்துவிட்டார் ஆனால் இன்றைக்கு அழகிரிஇருக்கும் இடம் எல்லாம் தெரியவில்லை.
தற்போது  தான் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயத்தால் அண்ணாமலை உளறி வருகிறார் குற்றாலத்தில் குளித்தால் பைத்தியம் தெளிவது போல வரும்19ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பின்பு அண்ணாமலை தெளிந்து விடுவார் அப்படி தெளியவில்லை என்றால் ஏர்வாடியில் சேர்ப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.

திராவிட இயக்கத்தில் மாலை நேர பல்கலைக்கழகமாக பொதுக்கூட்டங்கள் இருந்தது மேடை இல்லை என்றாலும் கூட கட்டை வண்டியில் நின்று கூட பேசுவேன் என்று அண்ணா சொன்னார்  மக்களிடம் பேசி மக்கள் ஆதரவு பெற்றார்.
ஆனால் இன்றைக்கு ரோடு என்ற பெயரில் பஞ்சு மிட்டாய் விற்பவர், ஐஸ் விற்பவர்கள் எல்லாம நிற்க வைத்து மக்கள் செல்வாக்கு இருப்பதை போல கணக்கு காமித்து அண்ணாமலை ஏமாற்றி வருகிறார்.
டெல்லி தலைவர்களை தலையாட்டி பொம்மையாக மாற்றி ரோடு ஷோ நடத்துகிறார்கள் ரோடுஷோ மூலம் எந்த மாற்றம் வரப்போவதில்லை.மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை மேலும்
 இந்த தேர்தலில் மத்தி,ய மாநில அரசுகளை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம் இதன் மூலம் பல்வேறு சோதனைகளை எதிர்ப்புகளை எல்லாம் கடந்துதான் இப்போது தேர்தல் பணியாற்றுகிறோம்  எங்கள் மீது பல்வேறு தொல்லைகள் கொடுத்தாலும் அதை சட்டரீதியாக எடப்பாடியார் எதிர்கொள்வார் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *