தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..

அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக வளாகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கடைபிடிக்கும் விதமாக உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது..

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராம கிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரவிடர் தமிழர் கட்சி வெண்மணி,வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம் காமராசு,தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம் நேருதாஸ்,மற்றும் லெனின்,பேரரிவாளர்,ஆதிதமிழன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *