கடலுார் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து பண்ருட்டி நகர அ.தி.மு.க.,வினர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவுலியா தர்கா வாசல், நான்கு முனை சந்திப்பு,பேருந்து நிலையம் ரத்தினம் பிள்ளை மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு, துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன், அவைத் தலைவர் ராஜதுரை, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் நல ராஜேந்திரன்,நகர் மன்ற உறுப்பினர் லாரி வெங்கடேசன், 21வார்டு செயலாளர் முஹம்மத் புன்னியாமீன் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகரத் தலைவர் காதர் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நெளஷாத் ,தேமுதிக நகர செயலாளர் சேகர், ஸ்டார் ஷவுகத் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *