யானையை விரட்டும் வனத்துறை டீமுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் யானைகள் சுற்றித் திரியும் காடுகள் பல இடங்களில் உள்ளன.

அவற்றைக் கடந்து தான் மலை கிராமங்களுக்கு செல்ல முடியும்.

ஆகவே மேற்கண்ட பகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் போது யானைகளின் அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருணா அவர்களின் உத்தரவின் பெயரில் யானையை விரட்டும் குழு அடங்கிய வனத்துறையினரை தேர்தல் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *