18.04.2024
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சீவலப்பேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் அவர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி அவர்கள், சீவலப்பேரி உதவி ஆய்வாளர் சிவகுமார் அவர்கள் ஆகியோர் இணைந்து நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.