நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்.
மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு மணிக்கு தொடங்கியது.இன்று காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமையை வருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் தனது வாக்கை செலுத்தினார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்
V.S.மாதேஸ்வரன் பொட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கு பதிவை செலுத்தினார். வாக்கு பதிவு செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது…. மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.