நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தனது வாக்கை மனைவியுடன் வந்து பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செலுத்தி விட்டு வெளியே வந்த ராகா தமிழ்மணி, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் அதிமுக அலை வீசுவதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும், நான் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் மிகவும் மக்கள் கொதிப்படைந்து உள்ளார்கள்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தான் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார்.