ஜே.ஆர்.டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்களித்தார்
கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் தொழிலதிபர் மற்றும் ஜே. ஆர். டி குழுமத்தின் தலைவர் ஜே. ராஜேந்திரன் காலை கோவைப்புத்தூரில் உள்ள ஆஸ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசினார்.