இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க புதிய வழிமுறைகளை அவ்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் பேட்டி
நாமக்கல்லில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் செய்தியாளர்களை (20.4.2024) சந்தித்தார்.
அப்போது கூறிய அவர்,
இந்தியாவிற்கு முன்னூதாரணமாக தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நாமக்கல் மக்களவை தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய E.R. ஈஸ்வரன், வாக்கு சாவடி அதிகாரிகளுக்கு கூடுதலாக பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அதே போல் வேட்பாளர்கள் 95 இலட்ச ரூபாய் செலவு செய்து கொள்ளலாம் என்பதை இன்னும் குறைக்க வேண்டும் என்றும், 95 இலட்சம் என்பது ஏழை வேட்பாளர்கள் போட்டியிடுவது சாத்தியமற்றதாகி விடும். செலவுகளை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கருத்துக்களை தெரிவிக்க உள்ளதாகவும் பேசினார்.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி கிடைக்கும் என்றும், தற்போது நாடு முழுவதும் மோடி எதிப்பலை உருவாகி உள்ளது, இதனால் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பெரும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தொகுதி பக்கமே காணவில்லை என்றும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பேசி வருவது குறித்து கேட்டபோது,, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் அது குறித்து பேசி தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறுவோம் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R. ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A K.P. சின்ராஜ், KMDK வேட்பாளர் V.S. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.