புழல் கதிர்வேடு பகுதியில் பட்டாகத்தி உடன் குடிபோதையில் ரவுடிகள் அட்டகாசம் கடைகளை அடித்து உடைத்து வழியில் சென்றவர்களை பட்டாகத்தியால் வெட்டியதால் பொதுமக்கள் பதட்டம்

சென்னை புழல் கதிர்வேடு பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கையில் பட்டாகத்தி உடன் சாலையில் கத்தியில் தேய்த்த வாரம் வாகனத்தை வேகமாக ஓட்டியும் வழியில் சென்றவர்களை மிரட்டும் விதமாக செயல்பட்டு வந்துள்ளனர்

அதன் பின் அந்த போதை ஆசாமிகள் வழியில் நின்ற விஜயகுமார் என்ற இளைஞரை திடீரென பட்டாக்கத்தியால் தலையில் தாக்கியுள்ளனர் அதில் அவர் காயம் அடைந்தார் அதன் பின் திருவள்ளூர் தெரு பகுதிக்குள் சென்ற இளைஞர்கள் சாலை ஓரமாக இருந்த கடைகளை அடித்து உடைத்துள்ளனர் இதில் கடைகளில் இருந்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் உடைந்தனர் அதிர்ஷ்டவசமாக கடை உரிமையாளர்கள் உள்ளே சென்று விட்டதால் உயிர் தப்பிள்ளனர்

இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் தெருவில் உள்ளே நுழைந்த இளைஞர்களாக நின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கிருந்து கொண்ட திவாகர் என்பவரையும் கத்தியால் தாக்கியுள்ளனர் அதில் சிறிது காயம் ஏற்பட்டு அவர் தப்பியுள்ளார்

இந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இளைஞர்களை தேடி வந்த நிலையில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளதாகவும் டில்லி என்பவரை தேடி வருவதாகவும்

கூறியுள்ளனர்

இதனால் இப்பகுதியில் மிகுந்த பதட்டமான சூழல் நிலவு உள்ளது தொடர்ந்து பகுதியில் கஞ்சா மற்றும் திருட்டு சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாகவும் இதனால் இப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் உள்ளதாகவும் பட்டாகத்தியுடன் இளைஞர்கள் சுற்றி திரிவதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறி உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *