உச்சத்திற்கு செல்லும் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! – இன்றைய விலை நிலவரம் என்ன?
தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

தங்கத்தின் விலை ஏறியும்,  இறங்கியும் வருவது வழக்கம். 

இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,000 கடந்தது.  தொடர்ந்து அதிகரித்து வரும் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1.160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ. 6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று  சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6.730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *