சென்னை புழல் மத்திய பெண்கள் சிறையில் போதை பொருள் வழக்கில் தொடர்புடைய திரிபுராவை சேர்ந்த சலேமாகாதூன் என்ற பெண் கைதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,அதனை தடுக்க சென்ற பெண் காவலர் சசிகலாவை கொலை மிரட்டல் விடுத்ததுடன் கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்பட்டது . இந்நிலையில்

சென்னை புழல் பெண்கள் சிறை 12 வது பிளாக்கில் திருநங்கைகள் வியாசர்பாடி ஷீபா (வயது 21) எருக்கஞ்சேரி அகல்யா( வயது 25) ஆகியோர் கொடுங்கையூர் பகுதியில் கள்ள மதுபானம் பெற்றதாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பிளாக்கில் இருக்கும் சிறைவாசி வண்ணாரப்பேட்டை லட்சுமி (வயது 50) என்பவருக்கும், இரண்டு திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது எங்கள் பிறப்பை பற்றி தவறாக பேசினாயா? என வாக்குவாதம் செய்தபடியே ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் லட்சுமிக்கு கழுத்து மட்டும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக புழல் பெண்கள் சிறை உதவி சிறை அலுவலர் அனுராதா புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாசிங் வழக்கு பதிவு செய்து
திருநங்கைகள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள்

294 பி ஆபாசமாக பேசுதல் 323 சிறு காயம் ஏற்படுத்துதல் , 506(1) மிரட்டல்
ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *