பெரம்பலூரில் பிரதமர் மோடி மீது அஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய மனிதநேய மக்கள் கட்சியினர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரம் செய்ததாகவும் அவரது பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்கட்சிகள் கண்டன தெரிவித்து வருகின்றனர்.

அவரது பேச்சிற்கு தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று மனிதநேய மக்கள் கட்சியினர் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்திலிருந்து அஞ்சல் மூலம் புகார் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் அக்கட்சியினர் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெரம்பலூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்திலிருந்து புகார் அனுப்பினர். புகாரில் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *