மதுரை சித்திரைத் திருவிழா விடிய விடிய அழகரின்
தசாவதார நிகழ்ச்சி.

மதுரை ஆழ்வார்புரம் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது.

விடிய, விடிய நடந்த இந்நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங் களில் அழகர் காட்சி தந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

(வியாழக்கிழமை) காலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வந்தார். பகல் 2 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் ஆனந்த ராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார்.

பின்னர் இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
அதே கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார்.

மூன்றுமாவடி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.32 மணி அளவில் தனது இருப்பிடம் சென்று அடைகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *