சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி அம்மன் பிறந்த இடமான பூம்புகாரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை கிளை நிர்வாகிகளும் வரலாற்று ஆர்வலர் குழுவினர்களும் சித்திரை முழுநிலா நாளில் 23-04-2024 அன்று மங்கலதேவி கண்ணகி அபிஷேகத்திற்கு பூம்புகார் காவிரிபூம்பட்டினத்தில் கண்ணகிக்கு பிறந்தவீட்டு சீதனமாக காவிரியில் புனிதநீர் எடுக்கும் வரலாற்று சிறப்பு நிகழ்வு
மற்றும் கம்பம் நகரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் வசம் புனிதநீர் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ச்சியில் தமிழக கேரள பகுதிகளை அரசாண்ட மங்கலதேவி கண்ணகி கோவிலை 800 ஆண்டுகள் பாரமரிப்பு செய்து பாதுகாத்து கொடுத்த பாண்டியர்களின் பூஞ்ஞார் ராஜகுடும்ப வாரிசுகள் புனிதநீரை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மண்டபத்தில் பெற்றுக்கொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் வசம் அபிஷேக புனிதநீரை ஒப்படைத்தனர் .