மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்வது வழக்கம்.

இதே போல் இந்த ஆண்டும் அதிமுக மணப்பாறை நகர கழகம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப. குமார் திறந்து வைத்தார்.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத், மற்றும் பழ வகைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமன், கெளசிக், மற்றும் சாய் சுரேஷ், பத்தி பாஸ்கர், ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *