செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
ரோட்டரி கிளப் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் சென்னை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று தேசூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில்ஆண்கள் 28, பெண்கள் 31 ஆக மொத்தம் 59
நபர்கள் கண் சிகிச்சைக்காக சென்னை டாக்டர் அகர்வால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த முகாமில் ரோட்டரி மூத்த நிர்வாகி டாக்டர் எஸ். குமார், ரோட்டரி கிளப் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட கிளப் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.