காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பதும் கள்ளச் சந்தையில் மது விற்பனைக்காக அரசு மதுபான கடைகளிலிருந்து மது பாட்டில்களை வாங்கி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ரமேஷிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *