பரமத்தி வேலூர் வார சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை கல் மற்றும் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து வியாபாரிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர் இதையடுத்து தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில்
ப.வேலூர் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்துசாமி ஒவ்வொரு கடைகளாக சோதனை நடத்தி 100 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து பேரூராட்சி வாகனத்தில் குப்பையில் கொட்டி அளித்தனர். இதுபோன்று மாம்பழங்கள், வாழைப்பழங்கள் ஆகியவற்றை ரசாயன கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தால் மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரிக்கை செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *