காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நீர் மோர் , இளநீர் , தர்பூசணி குளிர்பானங்களை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ , பெ.சு.தி சரவணன் வழங்கினார்
புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் அதிகமாக உள்ளதால் மக்களுக்கு தாகம் தணிப்பதற்கு நேற்று தண்ணீர் பந்தலை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ , பெ.சு.தி சரவணன் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் திறந்து வைத்தார்
அப்போது அவர் பேசுகையில்
தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை உள்ளதால் மக்கள் வெப்பத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் அதனால் மக்களுக்கு தாகம் தணிப்பதற்கு அவர்களின் வெப்பத்தை தணிப்பதற்கும் தண்ணீர் பந்தல் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அவர்களும் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை எ.வ. வேலு அவர்களும் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து அதன் மூலம் மக்களின் தாகத்தை போக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்
அதன்படி காஞ்சி , புதுப்பாளையம் , அம்மாபாளையம் , தண்ணீர் பந்தல் அமைத்து அதன் மூலம் தண்ணீர் , நீர்மோர் , தர்ப்பூசணி முலாம்பழம் ,இளநீர் , வெள்ளரிக்காய் , பழசாரக ஜூஸ் போன்ற நீராகாரமான பொருட்களை மக்களுக்கு பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ வழங்கினார்
இதன் மூலம் மக்கள் தாகத்தை தணிக்க வேண்டும் என்று கூறி இது தொடர்ந்து வெப்பநிலை குறையும் வரை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி .சுந்தரபாண்டியன் , பேரூராட்சி சேர்மன் செல்வபாரதி மனோஜ்குமார் , கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , நகர செயலாளர் சீனிவாசன் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனு , அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ் , அரிதாரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சம்பத் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் பலர் கலந்து கொண்டனர்