பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை. சுட்டெரிக்கும் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல்..

100-க்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..

தமிழகம் முழுவதும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை மற்றும் பாபநாசம் வட்டார ஜமாஅத்துல் உலமா சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அஞ்சுமன் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அஞ்சுமன் சமூக பூங்காவில் மழை வேண்டி நடத்தப்பட்ட சிறப்புத் தொழுகையில், சுட்டெரிக்கும் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஞ்சுமன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *