ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ட்ரிபிள் ஜம்பில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த பாப்பாங்குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுரு இவரது மகள் நிவேதா ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்து 11ஆம் வகுப்பு செல்கிறார் இவர் கோடைக்கால விடுமுறையில் ஜெயங்கொண்டம் பகுதியில் விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வரும் சோழ தேசம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் 29.04.2024அன்று தஞ்சாவூரில் YSPA மாநில அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டியில் ட்ரிபிள் ஜம்பில் ( triple jump) இரண்டாம் இடம் பிடித்தது வெள்ளி பதக்கத்தை பெற்று அரியலூர் மாவட்டத்திற்கு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவி நிவேதாவிற்கு ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.