தென்காசி மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் எம். கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த ஸநிகழ்ச்சிக்கு இலஞ்சி சங்கரா வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளர் இலஞ்சிக்குமரன் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அச்சன்புதூர் இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளர் செ.வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். என். கே.எம்.எம் நர்சரி பிரைமரி பள்ளியின் முதல்வர் பரிதாபானு தொகுப்புரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளிகள் சங்கத் தலைவர் கல்வியாளர் சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் லாரன்ஸ், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் செல்வம், எம்.கே.வி. கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் யேசுபாலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

ஸ்ரீநிவேதா நர்சரி பிரைமரி பள்ளிதாளாளர் சிவசங்கர், தேவி நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் மாரியப்பன், ஆகியோர் கருத்துக்கள் வழங்கினர். சுதா மாயி நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் தனியார் பள்ளிகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், ஆற்ற வேண்டிய கடமைகள், மாவட்டச் சங்கங்களை கட்டமைப்பது, மாநிலக் கூட்டமைப்புடன் இணைவதன் அவசியம் பற்றியும் கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது. கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *