தற்போது கோடை காலம் மேலும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் இடங்களில் சிக்னல் நிறுத்துமிடங்களில் வெயில் பந்தல் போடுவதாக ஆலோசனை செய்யப்பட்டது

அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணைய மதுபாலன் ஆகியோர் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக விவிடி சிக்னல் நிறுத்தத்தில் வெயில் பந்தல் போடப்பட்டுள்ளது

இதனை அடுத்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னல் காய்கறி மார்க்கெட் சிக்னல் . குரூஸ் பெர்னாந்துசிக்னல் மேலும் ஆகிய மூன்று இடங்களில் வெயில் பந்தல் போட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர் மேலும் கோடை காலத்தில் வரும் காலங்களில் அனைத்து போக்குவரத்து சிக்னல் இடங்களிலும் வெயில் பந்தல் போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

அதற்கு மாநகராட்சி நிர்வாகம் மேயர் ஜெகன் வரும் காலத்தில் தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல் இடங்களிலும் கோடை காலம் முழுவதும் வெயில் பந்தல் போடப்படும் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *