விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வழங்கும் 6 வது மைல் கோடை நீர் தேக்கம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் 18 அடி நீர் நிரப்ப வேண்டிய நிலையில் தற்போது கடுமையான வெயில் மற்றும் வெப்பக் காற்று காரணமாக தற்போது தண்ணீர் 12 அடியாக குறைந்துள்ளது.
தொடர்ந்து இதே வெயில், வெப்பக் காற்று அடிக்கும் சூழ்நிலை உருவானால் மேலும் தண்ணீர் கணிசமாக குறையும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. ராஜபாளையம் நகருக்கு தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டிய நிலை தற்போது வாரம் ஒரு முறை குடிநீர் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது குடிநீர் குறைந்து வருவதால் தொடர்ச்சியாக மழை பெய்தால் மட்டுமே வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க இயலும் என குடிநீர் வழங்கு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே மழை வேண்டி யாகம் போன்றவை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை பொதுமக்களும், இதர சேவை நிறுவனங்களும், ஆன்மீக அன்பர்களும் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.