தேனி மாவட்டம் பெரியகுளம் வடகறி சேர்ந்த தங்கம் உமா என்ற பெண் உடல் உறுப்புகளை தானம் செய்த தங்க உமா உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடல் உறுப்புகளை தானம் செய்த தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை காந்தி நகரைச் சேர்ந்த தங்க உமா உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் துணை ஆட்சியர் கண்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை (04.06.2024) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள் தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை காந்தி நகரை‌ சேர்ந்த திருமதி தங்க உமா 43 க பெ. அன்பு ராஜன் என்பவர் உடல் நல குறைவு காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தங்க உமாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக கணவர் அன்பு ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த தங்க உமாவின் இதயம், 2 கண், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று உடல் உறுப்புகளை தானம் செய்த பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தங்க உமா உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் துணை ஆட்சியர் கண்ணன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *