ஊத்துக்குளியில் 2 கிலோ 800 கிராம் கஞ்சா வைத்திருந்தவர் கைது


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிப்பாளையம் 4 ரோடு பகுதியில் ஒரு நபர் கஞ்சா விற்பதாக இன்று 10 06 24 ம் தேதி கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உடனடியாக அங்கு சென்ற ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் காவலர்கள் அனில்குமார் பட்டனாயக் 32 சோனாப்பூர் ஒடிசா என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் சுமார் 2 கிலோ 800 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்ததால் அவரை கைது செய்து வழக்கு பதிந்து பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *