பழனியருகே வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஓபுளாபுரம் பகுதியில் 240 பேருக்கு தலா இரண்டு சென்ட் அளவு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.‌ஆதி திராவிடர் நலத்துறை‌ சார்பில் கடந்த 1995ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. மேலும் அரசு வழங்கிய நிலத்தை சுற்றிலும் தனியாருக்கு சொந்தமான நிலமும்,ஒருபுறம் ரயில் பாதையும் அமைந்துள்ளதால் தனித்தீவு போல அமைந்துள்ளது என்றும், இதனால் பாதைவசதி இல்லாமல் தவிப்பதாகவும், அதேபோல் மின் இணைப்பு, குடிநீர் வசதி , குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் என எவ்வித வசதியும் செய்து தரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடும் போவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *