மேல் படிப்புக்கு பெற்றோர் அனுமதி தராததால் பட்டதாரி பெண் தற்கொலை

மேல் படிப்புக்கு பெற்றோர் அனுமதி தராததால் பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமியாபுரம் செங்கூட்டுவன் தெருவில் வசிபபவர் முருகராஜ் அமுதா தம்பதியினர்
முருகராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இராஜபாளையம் பணிமணை கிளை II-ல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்

இவருக்கு பிராகஷ் என்ற மகனும், கமலி என்ற மகளும் உள்ளதாகவும், கமலி வயது 20 என்பவர் இந்த வருடம் வேளான்மை கல்லூரியில் டிகிரி முடித்துள்ளதாகவும், கமலி மேல் படிப்பு படிக்க போவதாக கூறியதாகவும், அவரது பெற்றோர்கள் மேல் படிப்பு வேண்டாமென்றும், வீட்டிலிருந்து பயிற்சி வகுப்பு மட்டும் படித்தால் போதுமென்று சொன்னதாகவும், இந்த நிலையில் நேற்று மனைவி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும் முருகராஜும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் மாலை மனைவி அமுதா வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இவர்களது மகள் கமலி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்தவரை இறக்கி பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாமல் இறந்தது போல் இறந்தததாகவும், கமலியை இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் மருத்துவர் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் இதுகுறித்து தகவல் அறிந்த இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாணை செய்து வருகின்றனர்

உயர் கல்விக்கு பெற்றோர் அனுமதி மறுத்த நிலையில் கமலி தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் சொகத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *