தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று காலை வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், உடல் நலத்தை பேணிக்காத்து உடலையும் மனதையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பேச்சிமுத்து உட்பட சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீசார் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *