மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 168 வது வார நிகழ்வாக உலக மழைக்காடுகள் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா மற்றும் பராமரிப்பு பணி மதுரை ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்றது.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார்.
உறுப்பினர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக மங்களக்குடி அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்தியஷீலா கலந்து கொண்டு மரங்களின் அவசியம், பயன்பாடுகள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்விற்கு தேவையான புங்கை மரங்களை ஆலோசகர் பிரபு வழங்கினார். வலைகளை பாலமுருகன் வழங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் புங்கை மரம் நடப்பட்டது. மேலும் பத்து மரங்கள் பராமரிப்பு பணி நடைபெற்றது.
விழாவில் காளிதாஸ், ராமமூர்த்தி மற்றும் ஆலோசகர்கள் சமூக ஆர்வலர்கள் ஸ்டெல்லா மேரி, பாஸ்கரன், பாலமுருகன், பரமேஸ்வரன், சிவா, யாசர், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர்.
வகிதா பேகம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது. மாணவி ரித்திகாஸ்ரீ நன்றி கூறினார்.