ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ராஜுக்கள் கல்லூரியும், ராஜபாளையம் சிட்டி கால்பந்து கழகம் இணைந்து நடத்தியது.

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சார்ந்த 36 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டி நாக்அவுட் முறையில் நடைபெற்றது.

கால்பந்து போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் குமார் வாழ்த்துரை வழங்கி துவங்கி வைத்தார்.

அரை இறுதிப் போட்டிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி,ராஜபாளையம் சிட்டி கால் பந்து கிளப், சிவகாசி ஆர் எஃப் சி, அருப்புக்கோட்டை
எப் சி ஆகிய அணிகள் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி அணியும், ராஜபாளையம் சிட்டி கால்பந்து கிளப் அணியும் விளையாடியது. இதில் ராஜபாளையம் ரா ஜுக்கள் கல்லூரி முதல் இடத்தையும்,இரண்டாம் இடத்தை ராஜபாளையம் சிட்டி கால்பந்து கழகமும், மூன்றாம் இடத்தை சிவகாசி ஆர் எஸ் சி அணியும், நான்காம் இடத்தை அருப்புக்கோட்டை எப்சி அணியும் பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு கல்லூரி முதல்வர் ரமேஷ் குமார், பேங்க் ஆப் பரோடா மேலாளர் மகேந்திரன், பேங்க் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா,டைகர் சம்சுதீன் , சக்திவேல் ராஜா ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினர். இறுதியாக கல்லூரி உடற்கல்வித்துறை இயக்குனர் முத்துக்குமார் நன்றி உரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *