சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகந்நாதன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் பல்கலைக்கழக தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி நீட்டிப்பை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், முன்னாள் பதிவாளர் தங்கவேலு மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் நலச்சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தொழிலாளர்கள் முடிவுச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *