ஜூலை;-02
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,500/- வீதம் ரூ.125,000/- மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் புதிரை வண்ணார் நல உறுப்பினர்களில் 60-வயது நிறைவடைந்த 4 உறுப்பினர்களுக்கு ரூ.219,000/ க்கான உதவித் தொகையினையும், கடந்த திங்கள் கிழமை மக்கள் குறை நீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊனமுற்றோர் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு கொடுத்த ஊனமுற்றோர்களுக்கு ரூ.400.000-க்கான ஊனமுற்றோர் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் ரூ.7,44,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் . ஏ.கே.கமல் கிஷோர். வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 742 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொ). அமிர்தலிங்கம். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் முருகானந்தம். மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெய பிரகாஷ் உதவி ஆணையர் (கலால்) இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயுப் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் .இரா.இளவரசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.