தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி  சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி நகர் பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின்படி சுகாதாரத் துறை ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் சுகாதாரத் துறையினர் வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்

இதில் சட்ட விரோதமாக பாலிதீன் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதித்து உடனடி வசூல் செய்யப்பட்டது

மீண்டும் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வணிகர்களை எச்சரித்தனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியது போல அணுகுண்டை விட மோசமானது ஒரு மறை மட்டுமே பயன்படுத்தும் பாலிதீன் பைகள் இதை முற்றிலும் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக நகராட்சி அலுவலகம் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பாலித்தீன் பைகளை தவிர்த்து மஞ்சள் பை மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது நகர் மக்கள் மற்றும் வணிகர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *