தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவானது நேற்று 06-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது.
இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார்.
இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,ஸ்ரீராஜகணபதி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீராஜகணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கெட்டுகொட்டாய் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், செய்திருந்தனர்.