நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி,பெரம்பலூர் மாவட்ட நாதக சார்பாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட பொறுப்பாளர்களான பாலகுரு, ரத்தினவேல், ஹமர்தீன், மைக்கேல், கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் பாசறை பொறுப்பாளர்களான கோகிலா செல்லம்மாள் ஜான்சி ராணி மற்றும் செய்தி தொடர்பாளர் சத்தியசீலன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் சரவணன், பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் கவிதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இறுதியாக பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் நன்றி உரையாற்றினார்.

இதில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *