திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நாளை (23-ம் தேதி செவ்வாய் கிழமையன்று) மின் விநியோகம் இருக்காது என்று திருவாரூர் உதவி செயற் பொறியாளர் (கட்டுமானம்) அருள் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, வலங்கைமான் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக வலங்கைமான், ஆண்டாங்கோவில், கீழ விடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், ஆலங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நாளை( 23-ம் தேதி செவ்வாய் கிழமையன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *