தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளகாமயகவுண்டன் பட்டியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியின் 117 வது வருட உதய தினத்தை ஒட்டி காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்
மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன

இதில் நாவல் மரக்கன்றுகள் பாதாம் மரக்கன்றுகள் போன்ற மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 1908 ம் ஆண்டு பரோடா மகராஜாவால் இவ்வங்கி ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாட்டுடைமையாக்கப்பட்டது

வங்கி நிறுவனரின் நினைவாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது இந்த புனிதமான நிகழ்வில் வங்கி மேலாளர் அதிரா விஜயன் வங்கி அலுவலர் முத்துக்குமாரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் டாக்டர் ரமேஷ் டாக்டர் முருகானந்தன் சித்த மருத்துவர் சிராஜுதீன் மருந்தாளுநர் பசும்பொன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *